கிரிக்கெட் வாரியத் தேர்தல் அக்டோபர் 23ம் தேதி நடைபெறும் :வினோத் ராய்

கிரிக்கெட் வாரியத் தேர்தல் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் என வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோதா குழுப் பரிந்துரைப்படி இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை நிர்வாகிப்பதற்கு வினோத் ராய் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கிரிக்கெட் வாரியத்துக்கு அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அரியானா, மகாராஷ்டிர மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், கிரிக்கெட் வாரியத் தேர்தல் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் என வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வசதியாகக் கிரிக்கெட் வாரியத் தேர்தலை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version