அந்தியூர் அருகே நெஞ்சம் நெகிழ்ந்த சம்பவம்; வாழ்விலும், சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்

அந்த காலத்தில் தன் துணை ஒருவர் இறந்தவுடன் அதே இடத்தில் தானும் உயிரை மாய்த்துகொள்ளும் காட்சி பெரும்பாலும் திரைபடங்களில் இடம்பெற்றிருக்கும் அதனை மெய்ப்பிக்கும் வகையில் நிஜ வாழக்கையில் அந்தியூர் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு அருகே ஆலயங்கரடு கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி பழனியப்ப கவுண்டர், காமாட்சி அம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 58 வருடங்கள் கடந்து விட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

இந்த தம்பதிகள் தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து திருமணமும் முடித்து வைத்தனர். என்னதான் வயதுமுதிர்வு இருந்தாலும் இருவருமே ஒவ்வொரு நாளிலும் புதுமண தம்பதிகள் போலவே சந்தோசமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இருவருக்கும் இடையில் சண்டை என்பது துளியும் வந்தது இல்லையாம். எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் தன் மனைவியை கேட்டுதான் தூவங்குவாராம் பழனியப்ப கவுண்டர்.

அளவற்ற அன்புடனும் மிகுந்த ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தனர் இந்த தம்பதிகள். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி காமட்சியாம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமனார். அன்பு மனைவியின் பிரிவை தாங்காத பழனியப்பன் மனைவியின் சடலத்தின் அருகே அமர்ந்து அழுதவாறு தன் மனைவியை பார்த்து கொண்டிருந்தார். திடீரென சினிமாவில் நடப்பது போல பழனியப்பர் கவுண்டர் உயிரும் பிரிந்தது. உலகிற்கே உதாரணமாக வாழ்ந்த இந்த தம்பதிகளின் காதல் இறப்பிலும் தொடர்வதை பார்த்து அவ்வூர்காரர்கள் அதிசயித்தனர்.

Exit mobile version