இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை வீசுவோம்: பாக். அமைச்சர்

காஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு ஆதரவு அளிக்காமல், இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல முயன்று தோற்றுப்போன பாகிஸ்தான் இந்தியா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற கருத்தை சார்க் நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகள் தெரிவித்தன. அரபு நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளதால், பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது.

Exit mobile version