ஈரானில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஈரானில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில், மேலும் 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் 77 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version