தலைநகர் டெல்லியில், கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக தலைநகர் டெல்லியில் 69 வயது மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, கர்நாடகத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 69 வயதான மூதாட்டி ராம் மனோகர் லோகியா, சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறப்பை மத்திய சுகாதாரத்துறையும், டெல்லி அரசும் உறுதி செய்துள்ளது.

மூதாட்டிக்கு ஏற்கனவே சர்க்கரை நோயும், இரத்தக் கொதிப்பும் இருந்ததால், நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 82 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version