இந்தியாவில் 67 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில், 70 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 986 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 555ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 லட்சத்து 57 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது. 57 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில், இதுவரை 14 லட்சத்து 65 ஆயிரத்து 911 பேருக்கும், ஆந்திராவில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 307 பேருக்கும், கர்நாடகாவில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 705 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 பேரும், உத்தரபிரதேசத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 937 பேரும், டெல்லியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 236 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மேற்குவங்கம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

Exit mobile version