குக் வித் கோமாளி புகழால் திறந்த அன்றைக்கே சீல் வைக்கப்பட்ட கடை

நெல்லையில் புதிதாக துவங்கப்பட்ட செல்போன் கடையை திறக்க வந்த நடிகரை பார்க்க, அதிகளவில் கூட்டம் கூடியதால், மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிதாக செல்போன் கடை திறக்கப்பட்டது. இதில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதனால் அவரை காணவும் அவருடன் செல்பி எடுக்கவும், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை கண்ட காவல்துறையினர் ரசிகர்கள் மீது, லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

 இதனையடுத்து முகக் கவசம் அணியாமல் கூட்டம் அதிகம் கூடியது, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர். கடை திறக்கப்பட்ட அன்றே சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version