காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி தூய்மையற்றது – ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி தூய்மையற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் வனபார்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மதம் மற்றும் சாதியை கொண்டு அரசியல் செய்வதில்லை என்றும் அனைவரையும் வலிமை பெறச் செய்ய உறுதிப்பூண்டிருப்பதாகவும் கூறினார். அதனால், பா.ஜ.க குறித்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், தெலுங்கானாவை முன்னேற்றம் அடைய செய்வதில் சந்திரசேகர ராவ் தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதேசமயம் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி தூய்மையற்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

Exit mobile version