சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எஸ். சிங் தியோ தேர்வு

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எஸ். சிங் தியோ நியமிக்கப்பட உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், மத்திய பிரதேச முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்நாத், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் கட்சி தலைமை தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.எஸ். சிங் தியோ, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version