காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் அமைச்சகங்களுக்கு இடையே போட்டி- மோடி

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில், அமைச்சகங்களுக்கு இடையே போட்டி இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப்பேசினார். அப்போது பேசிய அவர், உலகளவில் தரவரிசைப்பட்டியலில் சுற்றுலாவில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது 4வது தொழிற்புரட்சியில், இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறினார். மேலும் அவர் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னர், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சகங்கள் மற்றும் தனிநபர்கள் இடையே ஊழல் செய்வதிலும், பணியை தாமதப்படுத்துவதிலும் போட்டி இருந்தது என்றார். குறிப்பாக, நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அதிக பணம் கிடைக்க வேண்டும் என்பதிலும் போட்டி இருந்தது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Exit mobile version