தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா ராகுல் காந்தி?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

17 வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை போலவே படுதோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் 16 ம்தேதி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி அடுத்த பிரதமராவார் என அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அவர் கட்சித்தலைவர் ஆன பின்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. இதனால் மக்களவை தேர்தலை அக்கட்சி நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அமேதி தொகுதியில் கூட அவர் பின்னடைவை சந்தித்தார். வயநாட்டில் மட்டுமே அவர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எதிராக அமைந்து விட்டதால் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவி விலகல் கடிதத்தை அவர் சோனியா காந்தியிடம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version