தீபாவளியில் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் -ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தீபத்திருவிழாவான தீபாவளியில் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எந்த வயது வித்யாசமுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்படும் விழா தீபாவளி என்று வாழ்த்து செய்தியில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீபாவளி அனைத்து குடும்பங்களுக்கும் ஒளியையும், உற்சாகத்தையும் வழங்கட்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தீபத்தை ஏற்றுவதை போல மற்றவர் வாழ்விலும் ஒளியை ஏற்ற உறுதுணையாக இருப்போம் எனவும் பன்வாரிலால் புரோகித் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version