காங். ஆட்சிக்கு வந்தால் மருத்துவம் இலவசம் – ராகுல் காந்தி பேச்சு

 ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக மருத்துவம் வழங்கப்படும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

பொக்ரானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக காங்கிரஸ் முதலமைச்சர் 18 மணிநேரம் உழைப்பார் என்று கூறினார். இதனால் வங்கிகள் இளைஞர்களுக்கு கடன் வழங்கும் என தெரிவித்த ராகுல் காந்தி, அதன் மூலம் பிறருக்கு அந்த இளைஞர்கள் வேலை வழங்குவார்கள் என்றார். பள்ளிகளை அதிக அளவில் திறப்பதோடு, மருத்துவமனைகளை கட்டமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Exit mobile version