தொழில் போட்டியால் இரண்டு ரெட்டிமேட் கடைகளுக்கு இடையே மோதல்!

சென்னை எம்சி சாலையில் உள்ள 2 ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்கள் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு கடையை கேளி செய்யும் வீடியோ ஒன்றை அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கடையின் ஊழியர் தருண், தனது சகாக்களோடு, அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு, கேளி வீடியோவை வெளியிட்ட ஊழியர் நிதின்குமார் இல்லாததால், நாகராஜ் என்பவரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த நாகராஜின் தாயார், கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்த சில வியாபாரிகளை திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததும், ரவுடி வெள்ளை நாகராஜை வரவழைத்து மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது.

Exit mobile version