மனநலம் பாதித்த இருவர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

சென்னை கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கோயம்பேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு மனநோயாளியை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்தவர் பிரான்சிஸ் பிரபா என்பது தெரிய வந்துள்ளது. இறந்தவரின் விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version