இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சர்கார் பட விவகார வழக்கில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை அவதூறாக சித்தரித்ததாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணைக்கு தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, நிபந்தனை ஜாமீனும் வழங்கியது.

Exit mobile version