குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்!

அயனாவரம் புதுநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் டெங்கு போன்ற நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக கூறுகின்றனர். இது தொடர்பாக குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேரடியாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அப்பகுதியினர், தங்கள் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version