6 ஆதிதிராவிடர் பிரிவுகளை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க குழு

ஆதிதிராவிடர் பிரிவில் இருக்கும் 6 பிரிவுகளை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க குழு அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதி திராவிடர் இன பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version