பாட்டில்களால் தாக்கிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களும் ,மூன்றாம் ஆண்டு மாணவர்களும் மெரினா கடற்கரையில், கத்தி, பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் வெட்டு காயம் ஏற்பட்ட கல்லூரி மாணவர்கள் சூரிய பிரகாஷ் , நவீன், சூர்யா ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.. விடியா திமுக அரசு இது போன்ற கல்லூரி மாணவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version