மது போதையில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திற்கு மது போதையில் வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டும், ஆபாசமாக பேசிக்கொண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறிய நிலையில். பொதுமக்கள் அச்சத்துடன் பேருந்து நிலையத்தை கடந்து சென்றனர். மக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிலையத்தில் போலீசார் முறையாக ரோந்து பணியில் இல்லாததே இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version