நெல்லையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

நெல்லையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பிரான்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி முடிந்த உடன் வீடு திரும்பிய அவரை, முன்னீர்பள்ளம் அருகே வழி மறித்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் ராஜா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version