தமிழகத்தில் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை

தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் புத்தாண்டு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதனால், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் வரும் 1 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரில் 2ந் தேதி இருந்து வழக்கம் போல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version