வலுவான பாரதம் அமைய வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி

திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். வலுவான பாரதம் இருந்தால்தான் நாட்டை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, அம்மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை திறந்து வைத்து, அதிமுக கூட்டணி மெகா கூட்டணி என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் எந்த கூட்டணியாலும் முடியாது என்றும் கூறினார். அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version