நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன்

விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் ராஜேந்திரன் என்றும் அனைவரிடமும் விருப்பு வெறுப்பின்றி அவர் பழகக் கூடியவர் என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாராம் சூட்டியுள்ளார்.

சாலை விபத்தில் ராஜேந்திரன் உயிரிந்த தகவலை அறிந்து மன வேதனையும் துயரமும் அடைந்ததாக கூறியுள்ள முதலமைச்சர், ராஜேந்திரனின் இழப்பு அதிமுகவிற்கு விழுப்புரம் தொகுதி மக்களுக்கும் பேரழிப்பாகும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ராஜேந்திரனின் மறைவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் அரசியலில் படிப்படியாக முன்னேறினார் எனவும் பழகுவதற்கு எளிமையானவர் என்பதோடு விழுப்புரம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version