விபத்தில் இறந்த ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன், ஜக்காம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மறைந்த எம்.பி., ராஜேந்திரன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அதிமுக கட்சிக் கொடி போர்த்தப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ராஜேந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version