தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் ஆதாரமற்றது: ரஞ்சன் கோகாய்

தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் ஆதாரமற்றது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து ரஞ்சன் கோகாய் தனது 20 வருட சுயநலமற்ற பணிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

வரும் வாரங்களில் சில முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்க உள்ளநிலையில் எழுந்துள்ள இந்த பொய் புகாரானது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அளிக்கும் நோக்கில் உள்ளதாகவும், அதனை கண்டு நான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version