கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தூத்துக்குடியில் கேக் தயாரிக்கும் பணிகள்

 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தூத்துக்குடியில் கேக் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, தூத்துக்குடியில் உள்ள முக்கிய கடைகளில் கேக் தயாரிக்கும் பணியில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, ரிச் பிளம் கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலர்ந்த பழங்கள், திராட்சை, முந்திரி, பாதாம்,பிஸ்தா ஆகியவைகளை ஒன்றாக கலவையாக்கி அதில் ஒயின்,ரம் உள்ளிட்ட
வெளிநாட்டு மதுபானங்களை ஊற்றி பிளம் கேக் தயாரிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version