பதற்றமான சூழ்நிலையை கவனமாக கையாள வேண்டும்: சீனா வேண்டுகோள்

இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய பிரச்சனையை கவனமாக கையாள வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லைப் பகுதியை போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பதற்றத்தைத் தவிர்க்க இருநாடுகளுக்கும் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் F – 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இருநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version