5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான பதிவுப் பணிகள், இனி, அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில் 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு 13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவிலான, ஆயிரத்து 302 ஆதார் உபகரணங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.இதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்.

 

 

Exit mobile version