வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை!

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018-ம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த பெண் குழந்தைக்கு மால்தி மேரி என பெயர் சூட்டினர். குழந்தைக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததால், சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது இருந்தது. இதனால் பல மாதங்களாக தனது குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டாமலே இருந்து வந்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, அவர் தனது வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version