கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கும் இடத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில், கால்நடை ஆராய்ச்சி மையம் அமைய உள்ள இடத்தை தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.

தலைவாசல் பகுதியில் உலகத் தரத்திற்கு இணையாக கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பின்படி, கால்நடை ஆராய்ச்சி மையம் அமைய உள்ள இடத்தை தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.

கால்நடை ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கான கட்டுமான அமைப்பு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கான அனைத்து துறை சார்ந்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version