ஜனவரி 5 ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

திருமூர்த்தி அணையில் இருந்து, வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருமூர்த்தி அணையில் இருந்து, பாலாறு படுகை மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கக் கோரி, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல், மொத்தம் 9 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

Exit mobile version