மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர், மகப்பேருக்கு பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்று மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்று இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், மருத்துவத் துறையின் தலைநகராக தமிழகம் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version