விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர் முதலமைச்சர் பழனிசாமி: அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தான் ஒரு விவசாயி என்று நிரூபித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், சென்னை திருவல்லிக்கேணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதாகக் கூறினார்.

Exit mobile version