முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப்பெரியால் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசு, மத்திய அரசை அணுகியது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தெரிவித்துள்ள முதலமைச்சர், சுற்றுச் சூழல் துறை வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version