இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் வருகை

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல் 2-ம் தேதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

ஏப்ரல் 3-ம் தேதி வரை சென்னையில் தங்கியிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதுதவிர, அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.

Exit mobile version