சட்டீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு – 70 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

90 தொகுதிகளை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ளது.

அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்ட தேர்தலில், மக்கள் ஆர்வத்துடன் வக்களித்தனர். இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version