4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற செஸ் போட்டி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சதுரங்க போட்டி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் மிராக்கிள் சதுரங்க பள்ளி இணைந்து இந்த போட்டியை நடத்தினர். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பரிசு மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டினார். இந்த போட்டியில் பங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்தக்கட்ட போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு இது முன்மாதிரியாக இது உள்ளதாகவும் போட்டியாளர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version