மாநில அளவில் நடைபெறும் 2 நாள் செஸ் போட்டி துவக்கம்

மாநில அளவில் 2 நாட்கள் நடைபெறும் செஸ் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவில் 2 நாட்கள் நடைபெறும் செஸ் போட்டிகள் துவங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டிகளை மாவட்ட செஸ் விளையாட்டு சங்கமும், வட்டமேஜை 176 இயக்கமும் இணைந்து நடத்தின. இதில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது, இதில் பங்கேற்று வெற்றி பெற்றவுள்ள மாணவர்களுக்கு பரிசுகளும்,கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version