போக்குவரத்து விதிமீறல்கள் மூலமாக ரூ.62 லட்சம் அபராதத்தொகை வசூல்!

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 21,175 வழக்குகள் இருந்துள்ளன. அவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டு ரூபாய் 61.70 லட்சம் அபராதத்தைப் போலிசார் வசூலித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடந்த மாதம் 27ஆம் தேதி திடீர் வாகன சோதனைகள் 166 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 5,757 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.  விதி மீறுபவர்கள் மீது பணமில்லாப் பரிவர்த்தனை மூலம் அபராதத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நிலுவையிலுள்ள மேற்குறிப்பிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 61 லட்சத்திற்கு மேலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version