சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!

சென்னை தீவுத்திடலில், ராட்டினத்தின் போல்ட் கழன்று தலையில் விழுந்ததில் இளம்பெண் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47-வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருகை தந்து ராட்டினத்தில் ஏறி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் ராட்டினத்தின் போல்ட் திடீரென கழன்று, இளம்பெண்ணின் தலையில் விழுந்ததில், லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆப்ரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்தி, பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆபரேட்டரிடம் விசாரணை நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் கூடும் இடத்தில் முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Exit mobile version