அகில இந்திய வாலிபால் லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 14வது அகில இந்திய வாலிபால் லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை ஐசிஎப் அணி வெற்றி பெற்றது.

பர்கூர் வாலிபால் கழகம் சார்பில் 14வது அகில இந்திய வாலிபால் பரிசு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 25ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 8 அணிகள் கலந்துகொண்டனர். ஆண்களுக்கான லீக் இறுதி போட்டியில், சென்னை ஐசிஎப் – டெல்லி நார்த் ரயில்வே அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 19க்கு 25, 23க்கு 25 மற்றும் 20க்கு 25 என்ற செட் கணக்கில் டெல்லி நார்த் ரயில்வே அணியை வீழ்த்தி சென்னை ஐசிஎப் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த விளையாட்டு போட்டியில் இறுதியில் வெற்றி பெறக்கூடிய அணிகளுக்கு பல லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version