சென்னையில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும்

 வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெர்வித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெற்கு ஆந்திரா, தமிழக கடலோர மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் கூறினார்.

 இந்தநிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடிய விடிய மழை பெய்தது. பின்னர் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Exit mobile version