புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள லஷ்மி அம்மன் கோவில் பேருந்து நிலையம் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சாலையில் விழுந்த திடீர் பள்ளத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Exit mobile version