இனி தாம்பரம் வழியாக பேருந்துகள் இயக்கப்படும்!

சென்னைக்கு வரும் அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகள் மதுரவாயில் வழியாக கோயம்பேடு செல்லாமல் தாம்பரம் வழியாக செல்லவேண்டும் என்று அரசுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தின் இடது புறம் உள்ள பேருந்து நிறுத்ததில் நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் மாலை 5.30 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு மதுரவாயில் வழியாக செல்லலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version