இன்னும் பத்து நாட்களில் சிசிடிவி கேமரா வளையத்தில் சென்னை நகரம்

இன்னும் பத்து நாட்களில் சென்னை நகரம் சிசிடிவி கேமரா வளையத்தில் கொண்டு வரப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் காவல் சரகத்தில் பொருத்தப்பட்டுள்ள 1004 சிசிடிவி கேமராக்களை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையில் வாரத்திற்கு 5 செயின் பறிப்பு குற்றச் சம்பவங்கள் என்றிருந்த நிலை இருந்தது. ஆனால் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய பிறகு, மாதத்திற்கு 1 என குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகரத்திற்கு மண்டல கூடுதல் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் முத்துசாமி மற்றும் சசாங் சாய் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும் இன்னும் பத்து நாட்களில் சென்னை நகரம் சிசிடிவி கேமரா வளையத்தில் கொண்டு வரப்படும் என அவர் கூறினார். 

Exit mobile version