இருக்கா இல்லையா..நம்பலாம நம்பப்பிடாதா..சென்னையில் பூகம்பம்.. உண்மையா? பொய்யா?

சென்னை அண்ணாசாலையில் நேற்று நண்பகலில் மக்கள் சிலர் நில அதிர்வுகளை உணர்ந்துள்ளனர். அது முதலில் மெட்ரோ பணிகளில் ஈடுபடுவதால் அந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் சென்னை மெட்ரோ பணிகள் கழகம் இதனை மறுத்துள்ளது. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் எந்தவித நில அதிர்வும் ஏற்படவில்லை என்று அவர்களின் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்த பொதுமக்கள் இந்த நில அதிர்வினை உணர்ந்துள்ளனர். ஆனால் சென்னையில் நில அதிர்வுகள் ஏற்பட்டது என்று தேசிய மையம் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் இந்த நில அதிர்வு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version