நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி புகார் அளித்த தொழிலதிபர்

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்யுக் தங்கம் என்ற தனியார் நிறுவனத்தில் ஷில்பா ஷெட்டியும் அவரது கனவர் ராஜ்குந்த்ராவும் இயக்குநர்களாக இருந்தனர். இந்தநிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு, சில சலுகையுடன் சத்யுக் தங்க திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வெளிநாடுவாழ் தொழிலதிபரான சச்சின் ஜோஷி, 18 லட்சம் ரூபாய்க்கு ஒரு கிலோ தங்கம் வாங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் 5 ஆண்டுகள் முடிவடைந்ததால், அந்த நிறுவத்திற்கு தொடர்புகொண்டுள்ளார். அப்படி ஒரு நிறுவமே இல்லை என தெரிவிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version