மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மேலக்கால் கணவாய் தர்ஹாவில் புகழ் பெற்ற சந்தனக் கூடு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று அதிகாலை வரை திருவிழா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான சந்தன கூடு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து தர்ஹாவில் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள  இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Exit mobile version