சென்னை பார்த்தசாரதி கோவில் குளத்தை தூர்வாரிய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்

  1. மழைநீர் சேகரிப்பு குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், சென்னை பார்த்தசாரதி கோவில் குளத்தில் தூர்வாரினர்.
  2. மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கமாண்டர் சத்திய பீர் சிங் அஸ்வால் மற்றும் ஆய்வாளர் பாபு பிராங்கிளின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கோவில் குளத்தை தூர் வாரினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு படை ஆய்வாளர் பாபு பிராங்கிளின், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்த்தசாரதி குளம் மற்றும் அதன் சுற்று பகுதிகள் தூர்வாரப்பட்டதாக தெரிவித்தார். இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீணாகாமல் அதிக நீரை சேமிக்க முடியும் என்று அவர் கூறினார். இதே போன்று, பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களை, வரும் காலங்களில் தூர்வார இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version